SHARE

கர்ப்பணி அதிகாரியும் கூடவே எங்கள் அடிகளை கழைந்தார் ; ஐ.நா. வில் அதிர்ச்சி அறிக்கை வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு இலங்கை இராணுவம் உட்படுத்திய போது பொலிஸ் உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் கூடவே இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. வில் இன்று வெளியிடப்பட்டுள்ள மௌனம் கலைந்தது” தப்பிவந்த ஆண்கள் சிறிலங்காவில் யுத்தத்தை மையப்படுத்தி நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்” அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக  அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இற்றை வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில்வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்ட மிகவும் பயங்கரவமான சாட்சியங்களை அடங்கிய இந்த அறிக்கை ஜஸ்மின் சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இன்று வெளியிடப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் பிடியிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களை மையப்படுத்தியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

 இந்த அறிக்கைக்கு 14வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றார். அதேவேளை இந்த அறிக்கைக்கு தகவல் வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை விசாரித்த புலுனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ சீருடை அணிந்திருந்த அந்த பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை சப்பாத்து கால்களால் மிதித்து, ஆணுறுப்பில் நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தியதாகவும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப்பெண் என்று தன்னால் அடையாளம் காண முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து பாலியல் சித்திரவதை செய்திருக்கின்றனர்.

“பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மை ஆடைகளை களைந்து அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்” என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கொடூரமான சித்திரவதைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகள் இலங்கை இராணுவம், பொலிஸ், மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உட்பட இலங்கை  அரச படைகளைச் சேர்ந்தவர்களே என்று ITJP யின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சித்திரவதைகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எடுத்தமாத்திரத்தில் நிராகரிப்பதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது என இந்த அறிக்கையை தயாரித்த கலாநிதி ஹெலீன் டூகேதெரிவித்தார்.

இதேவேளை ITJP இன்இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கை  இராணுவத்தைச்சேர்ந்த முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் சிங்கள கடும்போக்குவாத அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்தக்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை என்றும் குற்றம்சாட்டி குழப்பத்தை ஏற்படுத்தமுற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email