SHARE
-இலங்கை அரசை காப்பாற்ற ஜெனிவாவில் களமிறங்கியுள்ளோர்

ஐ.நா. மனித உரிமைகள் சபை அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கை மீதான தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை மீது கொண்டு வரப்பட்ட பிரேரணையின் பிரதான அனுசரணையாளரான அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கையின் இணை அனுசரணை நீர்த்துப் போகும். ஐக்கிய நாடுகள் சபை எமக்கு வழங்கிய தொழில்நுட்ப உதவியின் இறுதி பெறுபெறாக அமைந்தது எமக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதே. இது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இணை அனுசரணை வழங்கியதால் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

எனினும் அதற்கு ஜனாதிபதியினதோ அல்லது அமைச்சரவையினதோ அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே இந்த பிரேரணையின் பிரதான அனுசரணையாளராக இருந்த அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இருந்து விலகியதன் காரணமாக எமது இணை அனுசரணை தானாகவே நீர்த்துப் போகும் என்று அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email