SHARE

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது நேற்றிரவு இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராய் கிழக்கு சென் மைக்கல் தேவாலயத்தின் பின் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தேவாலயத்திற்கு அண்மையிலுள்ள வீடுகள் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.

தாக்குதலில் இரண்டு வீடுகளினதும் முன்பக்கம் கடும் சேதங்களுக்குளாகியுள்ளன.

பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email