SHARE
CCM இன் தலைமையை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஆதாரங்களிற்கு பதில்தரவேண்டும் என்கிறார் ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளாஸ்டர்) பயன்படுத்தியதுடன் அதன் எச்சங்களை யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றுவர்கள் கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை அரசு விளக்கமளிக்க வேண்டுமென என சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளார் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஊஊஆ எனப்படும் கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் (Convention on Cluster Munitions)  8 ஆவது மாநாடு கடந்த 3-5 அதிகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முடிவில் இவ் அமைப்பின் புதிய தலைமைப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அடுத்த வருடம் (2019) 9 ஆவது மாநாடுவரை தலைமைப்பதவியில் தொடரவுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த CCM அமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள இலங்கை தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை தனது நாட்டில் பயன்படுத்தியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அது குறித்து தெளிவு படுத்துமாறு ஜஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணத்தில் பொதுமக்களிற்கான பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பெருமளவில் காணப்பட்ட மக்கள் மத்தியில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை அனைத்து ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.

இலங்கை படையினர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ளன. 2016 இல் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரே இதற்கான சுயாதீன சர்வதேச விசாரணையை கோரியிருந்தார் எனினும் அது நடைபெறவில்லை.

ஐக்கியநாடுகளிற்கும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளிற்கும் பணியாற்றியுள்ள தமிழர்கள் தாங்கள் நேரடியாக கிளஸ்டர் குண்டுகளை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் பெண்ணொருவரின் காலில் இருந்து கிளஸ்டர் குண்டுகளின் சிதறல்களை அகற்றியுள்ளனர். அதேவேளை யுத்தத்தின் பின்னர் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல பகுதிகளில் கொத்துக்குண்டுகளின் சிதறல்களை கண்டுள்ளனர்.

எனவே தற்போது தடைசெய்யப்பட்ட ஆயுதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக குரல்கொடுக்கும் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அதன் கடந்த காலத்தை மறைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email