SHARE

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (5) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கண்டனபோராட்டத்தில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனதிராஜா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மாவட்ட செயலகத்தில் மகஜர் ஒன்றையும் கையனித்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக காரணங்கள் கூறப்படாது, வழக்குகள் தொடரப்படாது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் குதித்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாகவும், நல்லாட்சி அரசு உடனடியாக இவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தோ அல்லது புனர்வாழ்வளித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

Print Friendly, PDF & Email