SHARE

அரசியல் கைதிகளுக்கான யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடை பவணி நாளை அனுராதபுர சிறைச்சாலையை அடையவுள்ளது.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கான அவர்களின் வலி நிறைந்த நடைபயணம் கிளிநொச்சி வவுனியா ஊடாக பயணித்து 4 ஆவது நாளான இன்று கொட்டும் அடை மழையிலும் அனுராத புரத்தை அண்மித்த பகுதியை அடைந்துள்ளது.

இந்நிலையில் 5 ஆவது நாளாகிய நாளை அவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை அடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்கைதிகளை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்இ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பவணி காயங்கள் வலிகள் சோர்வுகள் என கண்ட போதிலும் மன உறுதியுடன் மாணவர்களால் தொடரப்பட்டு வருகின்றது.

Print Friendly, PDF & Email