SHARE

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் திடீர் சோதனையை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு வாள் ஒன்றை மீட்டுள்ளனர். அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் அண்மைக்கால முன்னெடுக்கப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய உடுவில் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதுதொடர்பில் இளைஞனின் வீடு சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனையிடப்பட்டது. அதன்போது வீட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாள் ஒன்று மீட்கப்பட்டது.

அதனை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2014ஆம் ஆண்டு தொடக்கம் வாள்வெட்டு வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் வழக்குகள் உள்ளன.

இறுதியாக 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவா குழுவைச் சேர்ந்த இவர், வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரில் முக்கியமானவர். சந்தேகநபர் சிறப்பு அதிரடிப் படையினரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்

Print Friendly, PDF & Email