SHARE

யாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்டு உள்ளதுடன் , இருவரையும் கைது செய்துள்ளனர்.

யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிஸாருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பேருந்தை ஓமந்தை நகர் பகுதியில் மறித்து தீவிர சோதனைகளை மேற்கொண்ட போது பயண பொதி ஒன்றில் இருந்து ஆயிரத்து 600 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த போதை மாத்திரையை கடத்தியவர்கள் எனும் சந்தேகத்தில் குறித்த பேருந்தில் பயணித்த திருகோணமலையை சேர்ந்த இரு இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Print Friendly, PDF & Email