SHARE

மாதகல் கடற்பரப்பில் 151 கிலோ 600 கிராம் கஞ்சாவுடன் படகில் பயணித்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டு இருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை மறித்து சோதனையிட்ட போது படகினுள் 65 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 151 கிலோ 600 கிராம் கஞ்சா போதை பொருளை கடற்படையினர் கைப்பற்றினார்கள்.

அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களையும் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email