SHARE

இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற உறுதியான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமையவே காவல் திணைக்களம் செயற்படுமென, காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர்களிற்கும் முன்னர் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே தன்னாள் பாதுகாப்பை வழங்க முடியும். அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ வேண்டுகோள் விடுப்பதற்காக தன்னால் பாதுகாப்பை வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email