SHARE

இலங்கை நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து  ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6 மணிக்கே, கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தைக் நேற்று மாலை கொண்டுவந்தவுடனேயே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில் கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இலங்கை நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து  ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஜக்கிய தேசியக்கட்சியின் அவசர கூட்டம் ரணில் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதேபோல கூட்டமைப்பின் ஆராய்வதற்கான கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.கூட்டமைப்பு நீதிமன்றிறகு செல்வது தொடர்பில் முடிவெடுத்துவிட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. அதாவது பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

இதனால் கொழும்பு அரசியல் பெரும் குழப்பமடைந்தது. பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரி வந்த நிலையில், நாடாளுமன்றமும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றை கூட்ட தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.இதனையடுத்தே ஜக்கிய தேசியக் கட்சியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email