SHARE

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த 10 பவுண் நகைகளை திருடர்கள் திருடியுள்ளனர்.

வடமராட்சி வதிரி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

அது குறித்து தெரியவருவதாவது ,

குறித்த பகுதியில் வயோதிப பெண்ணொருவரின் மரண சடங்கின் போது உறவினர்கள் சோகத்திலும் கிரியை ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த போது அவர்களுக்கு இடையில் ஊடுறுவிய திருடர்கள் சடலத்தில் இருந்த சங்கிலி , காப்பு மற்றும் தோடு ஆகிய பத்து பவுண் நகையை திருடி சென்று உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறவினர்களால் நெல்லியடி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சடலத்தில் இருக்கும் நகைகளை கூட களவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் மரண சடங்கில் கலந்து கொண்ட பலரும் திட்டி தீர்த்திருந்தனர்.

Print Friendly, PDF & Email