SHARE

யாழ்.இணுவில் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மது போதைக்கு அடிமையான தந்தை நேற்று இரவு அதிக மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது 5 வயது மகனை கொடூரமாக கடித்து குதறியுள்ளார். அதனால் சிறுவனின் கை . முதுகு , முகம் ஆகிய பகுதிகளில் கடுமையான கடி காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

அந்நிலையில் உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , தந்தையை கைது செய்த போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

Print Friendly, PDF & Email