தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று மாலை 4 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு சந்திப்பு நடைபெற்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பால் சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் திங்கட்கிழமை (இன்று) சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.