SHARE

மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதான வீதி கேத்ததாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சிறீகலா (36) என்ற தாயாரே இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வேலை நிமித்தம் கொழும்பு சென்றுள்ள நிலையில் அவர் வீட்டில் நடத்தி வந்த சிறிய கடையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த பெண் குடும்பத்தகறாறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் பரப்பப்பட்டு வருவதுடன் அது கொலையா தற்கொலையா என்பாற்கான முடிவு எட்டப்படாமலே அதனை தற்கொலை என மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பெண்ணின் இரு கால்களும் தரையில் நன்கு தொடும் நிலையில் இது எவ்வாறு தற்கொலை ஆகும் என பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரும் குற்றப்பிரிவினர் மேற்கொண்டுவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email