SHARE

வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்துவரும் அடை மழையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கிளிநொ்சசியில் வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வன்னி மாவட்டத்தில் இதுவரையில் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டள்ளன. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயர் பிரிவில்

701 குடும்பங்களை சேர்ந்த 2550 பேர் பாதிக்கப்பட்டுளு்ளதாகவும், அதில் 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 229 குடும்பங்களை சேர்ந்த 858 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில்

629 குடும்பங்களை சேர்ந்த 2026 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 341 குடும்பங்களை சேர்ந்த 1119 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில்

17 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பாதுகாப்பான அமைவிடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Print Friendly, PDF & Email