SHARE

வடமாகாணத்தில்  பெய்துள்ள தொடர் அடை மழைகாரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும்,கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம்,மலையக பகுதிகளில் வாழும் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுவதாகவும் அதனால் அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளையும்   அடுத்த சில நாட்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களையும் வழங்கி உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான தேவையும் பெருமளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றையும் வழங்கி உதவுமாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email