SHARE

யாழில்.டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த வீரசிங்கம் ரவீந்திரன் (வயது 55) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக பணியாற்றிய குறித்த குடும்பஸ்தர் தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் காய்சலினால் பீடிக்கப்பட்டு இருந்தார்.

அதற்கு வைத்திய சாலை சென்று உரிய சிகிச்சைகளை பெறாது வீட்டில் தானே குளிசைகளை போட்டு வந்துள்ளார்.

அந்நிலையில் கடந்த 24ஆம் திகதி கடும் சுகவீனமுற்ற நிலையில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த ஒரு வார காலமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

டெங்கு நோயின் தாக்கமே உயிரிழப்பு காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Print Friendly, PDF & Email