SHARE

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் ஆயுதங்களுடன் சென்ற நபரை பொலிசார் கைது செய்ய முயன்ற போது குறித்தநபர் ஆயுதங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.

கனகராஜன் குள பொலிசாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு , புதூர் வீதியில் ஆயுதங்களுடன் ஒருவர் நடமாடுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்ய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

போலீசாரை கண்டது ஆயுததாரி ஆயுதங்களை கைவிட்டு விட்டு காட்டுக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார். 4 கைக்குண்டுகள் , ஒரு கைத்துப்பாக்கி , கைத்துப்பாக்கி மகசின் , ரவைகள் , லைட்டர் , சோப் , பற்பசை , போன் சாஜர் உள்ளிட்டவையை பொலிசார் மீட்டுள்ளனர்.

அந்நிலையில் காட்டுக்குள் தலைமறைவான ஆயுததாரியை கைது செய்யும் நோக்குடன் இன்று அதிகாலை முதல் இராணுவத்தினர் , பொலிசார் . பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , புலனாய்வாளர்கள் புதூர் பகுதி காட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

Print Friendly, PDF & Email