SHARE

சிவபிரகாசம் சிவசீலன்(32) எனும்  தமிழ் அரசியல் கைதி தனது விடுதலையினை வலியுறுத்தி சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை முதல் அனுராதபுரம் சிறையிலிருந்து அவர் தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இலங்கை இராணுவம் 19 மே 2009 அன்று வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து அவரை கைதுசெய்தது. இறுதி யுத்த இனப்படுகொலை நடக்கும் போது அவரது தாயையும் ஒரு சகோதரரையும் இராணுவ எறிகணை வீச்சில் அவர் இழந்திருந்தார். அவரது தந்தை சிவப்பிரகாசம்,  மகனின் விடுதலைக்காக அயராது பாடுபட்டுவந்திருந்த நிலையில்  டிசெம்பர் 16 ம் திகதி கிளிநொச்சி வட்டக்கச்சியில் காலமானார்.

2009 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக சிவபிரகாசம் சிவசீலனது வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே சிவபிரகாசம் சிவசீலன் தனது போராட்டத்தை கடந்த சனிக்கிழமை முதல் சிறையில் ஆரம்பித்துள்ளார்.

Print Friendly, PDF & Email