SHARE
-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும்  மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக்கொண்டிருந்தாலும்  திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற இராஜதந்திரிகள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதத் தடைச்சட்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். யுத்தத்தின் போது பாக்கிஸ்தான் இராணுவத்தின் மல்டி பரல்கள் கொண்டுவரப்பட்டதாக அனுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறியுள்ளார்.

எனவே  பல நாடுகள் இணைந்துதான் இங்கு யுத்தத்தில் ஈடுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.

Print Friendly, PDF & Email