SHARE

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு குழு தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 
அந்நிலையில் கோவிலுக்கு அருகில் வைத்து வாள் வெட்டுக்குழு இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

குறித்த தாக்குதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இளைஞர்கள் நோயாளர் காவு வண்டியில் (அம்புலன்ஸ்) மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதேவேளை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று குறித்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்துடன் வந்த குழுவொன்றினை ஊரவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போது நான்கு பேர் மாட்டிக்கொள்ள மற்றையவர்கள் தப்பி சென்று இருந்தனர். தாம் மடக்கி பிடித்த நால்வரையும் ஊரவர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது. 

Print Friendly, PDF & Email