SHARE

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் எழைக் குடும்பம் ஒன்றின் வீடானது விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கட்டைக்காட்டு பகுதியில் மூன்று பிள்ளைகளுடைய குடும்பமொன்றின் வீடே இன்று அதிகாலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பமானது தமது வீடானது குடிசையாக உள்ளதனால், அவர்கள் அருகில் உள்ள அயலாரது வீட்டில் உறங்குவதே வழமையாகும்.

அந்தவகையில் நேற்றைய இரவும் குறித்த குடும்பம் அயல் வீட்டில் உறங்க சென்ற பின்னரே இன்று அதிகாலை அவர்களது வீடு எரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களது உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் இச் சம்பவம்  தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email