SHARE

சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை

புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென லண்டனில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான நேற்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து தூதரகத்தின் முன் கோசங்களை எழுப்பினர்.

இந்நிலையில் குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் வரதராஜா மோகனரூபன் மற்றும் ரமேஷ்கரன் மாணிக்கம் ஆகிய இருவரும் இலங்கையின் சுதந்திர தினத்தை தாம் கரி நாளாக அனுஷ்டிப்பதாகவும் தமிழர்களுக்கு இலங்கைக்குள் இன்னும் சுதந்திரம் இல்லை எனவும் நமது நாடு இணைய செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த ஆண்டு இதேபோல் நடைபெற்ற சுதந்திர தின எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் போது தங்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்த தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக பிரித்தானிய அரசு இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை குறித்து கவலை தெரிவித்த அவர்கள் விரைவில் அவரை கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Print Friendly, PDF & Email