SHARE

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கி படுகாயப்படுத்தப்பட்டுள்ளார்.

விசுவமடு கோட்ட அரசியற்துறைப்பொறுப்பாளராக பணியாற்றியிருந்த அன்பரசன்(செல்வராசா) எனும் போராளியே இனந்தெரியாத நபர்களால் வெட்டிக்காயப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2ம் திகதி சனிக்கிழமை  இரவு அவர் தாக்கப்பட்டுள்ளார்.

அதனை தடுக்க முற்பட்ட இவரது மகனும் காயங்களுக்குள்ளானார். இவர் ஒரு கலைஞர். 1990 களில் வில்லிசை மற்றும் நாடகங்களின் மூலம் மக்களிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இருந்தவர். பின்னாளில் விசுவமடு கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளராகவும் பின்னர் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

உளவியல் ரீதியாக பாதிப்பட்ட மக்களிற்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் உதவிதிட்டங்களை செயற்படுத்தியிருந்தவர். 
சமாதான காலப்பகுதியில் தென் இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபொழுது அம்மக்களுக்கான உதவிதிட்டங்களை முன்நின்று செயற்படுத்தியிருந்தார். தற்பொது சாரதிகள் பயிற்றுநராக கடமையாற்றி வருவதுடன் சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

Print Friendly, PDF & Email