அதிகாரப் பரவலாக்கல் என்பது மக்களைத் திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றிஅரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அல்ல. இலங்கையில் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்த முடியும். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முடியாது. அதுதான் எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை. இவ்வாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச, பெங்களூரில் ‘த ஹிந்து’ பத்திரிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் நேற்றுப் பங்கேற்று உரையாற்றினார்.
அவரது உரை முடிந்த பின்னர், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்குக்கு இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் நேற்றுக் காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.