SHARE

மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள் இன்று (21) தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நந்திகடல் ஏரிக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுள்ள படையினர் அக்காணிகளை விடுவிக்க மறுத்து வருகின்றார்கள். போர் இறுதியாக நடைபெற்ற கரையோர பகுதிகளில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.அத்துடன் மக்கள் வாழ் இடங்களில் உள்ள பல கிணறுகளை படையினர் மூடியுள்ளார்கள். விடுவிக்கப்பட்ட காணிகளில் கிணறுகள் இருந்த இடங்கள் தெரியாதவாறும் மூடியுள்ளார்கள்.

தற்போது போராட்டம் இடம்பெறும் கொட்டிலுக்கு அருகிலும் கிணறு ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அதுகூட இல்லை. விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த 25ற்கும் மேற்பட்ட கிணறுகளை படையினர் இடம் தெரியாதவாறு மூடியுள்ளார்கள்.

இது எங்களுக்கு சந்கேத்தினை ஏற்படுத்தியுள்ளது இறுதிப்போரின்போது மன்னார் மனித புதை குழிபோன்று ஏதாவது புதைகுழிகளை அல்லது தடயங்களை கிணறுகளில் இட்டு மூடியுள்ளனரா என சந்தேகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Print Friendly, PDF & Email