SHARE

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்” எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெற்றது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் , தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் எடுக்கபட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே காட்சிப்படுத்தப்பட்டன. 

யாழில். தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த கண்காட்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email