SHARE

தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனரும் நீண்டகால தமிழ் செயற்பாட்டாளருமான காலஞ்சென்ற திரு. வைரமுத்து வரதகுமார் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) லண்டனில் நடைபெறவுள்ளது.

லண்டன் Newmalden KT3 5PE எனும் முகவரியில் அமைந்துள்ள Richard Chalenor School மண்டபத்தில் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை மேற்படி இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களின் விடிவிற்காக நீண்டகால அர்ப்பணிப்புடன் செயலாற்றிவந்த திரு.வரதகுமார் யுத்ததின் பின்னர் தமிழ் மக்களின் மீள் எழுச்சிக்காக எண்ணிலடங்கா செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். பிரித்தானியாவை தளமாகக்கொண்ட தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனராக இறுதிவரை செயலாற்றிய அவர் சொல்லும் செயலும் ஒன்றென இயங்கிக்கொண்டிருந்ததுடன் அவ் அமைப்பின் செயற்பாடுகளின் ஊடாக உலகெங்கும் தமிழர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email