SHARE

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தந்தையையும் மகனையும் வாளினால் வெட்டி காயப்படுத்தி , வீட்டின் மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை இரவு 11  மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த இளைஞன் மீதும் அவரது தந்தை மீதும் வாளினால் வெட்டி தாக்குதல் நடாத்தினார்கள். பின்னர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று இருந்தனர். 

குறித்த சம்பவத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை உடுவில் பகுதியில் வைத்து  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தை ஐந்து பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டனர் என முறைப்பாட்டாளர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Print Friendly, PDF & Email