SHARE

இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுபவர்களின் சிலர் எரியூட்டப்பட்டனர். அதேவேளை கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதற்காக பயங்கரமான சித்திரவதைகளை தனது கண்முன்னே நிகழ்த்தினார்.

இவைகள் அனைத்தும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கட்டளையின் கீழே இடம்பெற்றது என கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கினை தொடர்ந்துள்ள தமிழரான றோய் சமத்தானம் தெரிவித்துள்ளார்.

நமது ஈழநாடு‘ இணையத்தளத்திற்கு இன்று அளித்த விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

கனேடிய குடியுரிமையை கொண்ட அவர் 2007 ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2010 ஆண்டு உயிர் தப்பி வெளிவந்த அவர் கோத்தபாய ராயபக்கச குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவை குறித்து முழுமையான காணொளி பின்வருமாறு,

Print Friendly, PDF & Email