நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடங்களுக்குப் பொதுமக்கள் பார்வையிட வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கும் மற்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதனாலும் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் இத்தகவல் விடுக்கப்பட்டுள்ளது.