SHARE

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகளை இன்று திங்கட்கிழமை முதல் தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

தேசிய பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் அனைத்து உடைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில்
இன்று முதல் தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, அவசரகால நிலையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த நாட்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email