பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று
அம்பாறை சாய்ந்தமருதுவில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்தவின் முன்னிலையில் இந்த தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய சகோதரரின் சில உறுப்புக்கள் பழுதடைந்து காணப்படுவதனால், தேவையான சில உறுப்புக்களைப் பெறுவதற்கே இன்று மீண்டும் தோண்டப்படுவதாக கூறப்படுகிறது