SHARE

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய  ராஜபக்ஷ என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டிசொய்சா குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் தேர்தலை மாத்திரம்  மையப்படுத்தி பரந்துப்பட்ட கூட்டணியமைக்கப்படவில்லை. இரண்டு பிரதான கட்சிகளுக்கும்   சவால் விடுக்கும்  வகையில் பொதுஜன பெரமுன    பலம் பெற்றுள்ளது. பலம்பெற்றுள்ள ஒரு கட்சியுடன் பிறிதொரு கட்சி  கூட்டணியமைக்கும்போது அதிக பெரும்பான்மையினை  கொண்டுள்ள கட்சிக்கே முக்கிய நிலைகளில் முதல்  அந்தஸ்தது  வழங்கப்படும். இதனடிப்படையில் கூட்டணியமைத்தாலும், அமைக்காவிடினும் பொதுஜன பெரமுனவினவிற்கே என்றும் முதலுரிமை வழங்கப்படும்.

தேசிய பாதுகாப்பிற்கு  நடப்பு அரசாங்கம் எவ்வித முக்கியத்துவமும்  கொடுக்கவில்லை என்பது  ஆரம்பத்தில் இருந்து அரசியல்வாதிகளினால் மாத்திரமே பேசப்பட்டது. ஆனால் இன்று  பாராளுமன்ற தெரிவு குழுவின் ஊடாக அமைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டமையினால் தேசிய பாதுகாப்பு தொடர்பில்  அரசாங்கத்தின் அனுகுமுறைகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை  ஒட்டுமொத்த மக்களும் அறிந்துக் கொண்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email