SHARE

வவுனியா ஆசிக்குளம் வீதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்ற குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புலனாய்வாரள்களளென தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு வந்த நபர்களே லண்டனிலுள்ள அவரது மகன் உமாராஜ் குறித்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 22 ஆம் திகதி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு இரவு 11 மணியளவில் சென்ற 4 பேர் தம்மை புலனாய்வாரள்கள் என அறிமுகப்படுத்தி வெளிநாட்டிலுள்ள அவர்களது மகன் உமாராஜ் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதில் லண்டனிலுள்ள அவர்களது மகன் விடுதலைப்புலிகளுக்கு ஆதராவான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதனை நிறுத்தும்படி சொல்லுமாறு தந்தை மிரட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் அவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே கொலை அச்சுறுத்தலுக்குள்ளான குடும்பஸ்தர் கிருஷ்ணமூர்த்தியால் தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email