SHARE

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும்  இரு பெரும் கட்சிகளும் அமைத்த அரசாங்கம் தீர்வை தரும் என்ற அடிப்படையிலே அதற்கான செயற்பாடுகளை எடுத்துக்கொண்டு இருந்தோம்.  

ஆனால் தற்போதைய நிலைப்பாட்டில் அவை நடப்பதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக இல்லை என தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைக்கழகத்தின் பேராளர் மாநாட்டின் பின் நடைபெற்ற  ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்,

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முப்பது ஆண்டு காலமாக குறிப்பாக பிரேமதாசா காலத்தில் இருந்து அது உபசெயலகமாக இயங்கினாலும் கூட அதனை தரமுயர்த்துவதற்கு பல்வேறு தடைகள் போடப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. அங்கே இருக்கின்ற முஸ்லீம் சமூகத்தினருக்கு இந்த செயலகம் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் அதனை ஒரு பிரச்சனையானதாக எண்ணி தடை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அத்துடன் தொடர்ந்து வந்த அரசுகளும் தற்போதை அரசும் கூட நாங்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்தும்  கூட அதனை செயற்படுத்துவதில் கால தாமதத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. 

இதற்காக நாங்கள் இந்த விடயத்தில் போராடுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பூரண ஆதரவை நாங்களும் வழங்குவோம். இதனை நாங்கள் ஒரு தீர்மானமாக எடுத்ததோடு வேறு பல தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்

Print Friendly, PDF & Email