SHARE

கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலுடன் படையினரின் கனரக வாகனம் மோதியதிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தானியங்கும் மின்னொளி சமிக்ஞை காணப்படும் நிலையில், அந்த வீதியின் ஊடாக கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கனரக வாகனத்தில் 7 படைவீரர்கள் பயணித்துள்ள நிலையில், அவர்களில் 4 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஏனைய மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email