SHARE

நபர் ஒருவருடன் முரண்பட்டவரை கைது செய்ய பெருமளவான பொலிஸார் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.சாவகச்சேரி சந்தையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இரு நபர்கள் முரண்பட்டுள்ளனர். முரண்பட்டவர்களில் ஒருவர் அங்கிருந்து சென்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அடுத்து மூன்று வாகனங்களில் வந்த பெருமளவான பொலிஸார் சந்தைக்குள் புகுந்து தேடுதல் நடாத்தி முரண்பாட்டில் ஈடுபட்ட மற்றையவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

காலை வேளை சந்தையில் சன நெருக்கடியின் மத்தியில் பெருமளவான பொலிஸார் சந்தைக்குள் குவிந்து நபர் ஒருவரை கைது செய்து கொண்டு சென்றமையால் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டிருந்தது.

பின்னர் முரண்பாட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டார் என தெரிய வந்ததும் பதட்டம் தணிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email