யஸ்மின் சூக்கா விசேட உரை நிகழ்த்துவார்
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான சாட்சியப் பதிவுகளுடன் கூடிய தகவல்களை உள்ளடக்கிய மற்றுமொரு ஆவணத்தினை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வாக வெளியிடவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் (ITJP) ஏற்பாட்டில் பக்க நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதோடு அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தலைமையில் நடைபெறவுள்ள விசேட ஆய்வுரை நிகழ்வில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, அவ்வமைப்பின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்ஸஸ் ஹரீசன் மற்றும் புலனாய்வாளர் வான்டர் ஸ்டாடென் பொந்தோஷ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.