SHARE

எமது ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள நினைக்கும் சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் நாம் பேசத் தயார் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆத­ரவு குறித்து முல்லைத்தீவில் கருத்­து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்­மானம் ஒன்றும் எடுக்கப்­ப­ட­வில்லை என கூறினார்.

வேட்­பா­ளர்கள் விரும்­பினால் அனை­வ­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது என்றும் அதில் அவர்கள் முன்வைக்கும் காரணிகளை தீர்வுகளை அவதானித்து எமது முடிவுகளை நாம் எடுப்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email