SHARE

கிளிநொச்சியில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு லண்டனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரான  மொஹமட் அனீஸ் அவர்களால் கடந்த வாரம் வாழ்வாதார உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

கிளிநொச்சி -கிளவன்குளத்தை சேர்ந்த  முன்னாள் போராளி பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் மீன்வியாபாரத்தை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும், மாங்குளம் கல்குவாரியை சேர்ந்த நாகரட்ணம் சந்திரசேகரன் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கோழி வளர்ப்புக்கான உபகரண செலவும் முரசுமோட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பா. விஜயபாரதியின் பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் வழங்கப்பட்டது. 

கிளிநொச்சியை சேர்ந்த சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணிக்கம் ஆறுமுகம் என்பவருக்கு மருத்துவ செலவுக்கான நிதியும் கோணாவில்யூனியன் குளத்தை சேர்ந்த முன்னாள் போராளி கந்தசாமி ரதீஸ்குமாருக்பு மாற்றுத்திறனாளிக்குரிய கதிரை வாங்குவதற்கான நிதியும் குறித்த செயற்பாட்டாளர் அனீசால் வழங்கிவைக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email