நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போது அரச அதிகாரிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக வேட்பாளர்களுக்கு சார்பாக கருத்துக்களை வெளியிடுவதை தவிர்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.