SHARE

இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிருடன் மீள வேண்டுமென யாழில் மௌனப்பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் ஒன்று கூடி, ஆள்கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இப்பிரார்த்தனையில் மனித நேயக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இதில் கருத்துரைத்த வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தவிசாளர், ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச்சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். அதற்காக இலங்கையில் இருந்துகொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email