SHARE

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல” என்ற சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது சுவிஸ் கூட்டாச்சி உச்ச நீதி மன்றம்

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாக கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பு அல்ல என ஏற்றகனவே சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல” என்ற சுவிஸ் கூட்டாச்சி குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என சுவிஸ் உச்ச நீதி மன்றம் சற்று முன்னர் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பினையடுத்து உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமது மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email