SHARE

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னான்டோவை கைதுசெய்யக்கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளுமாறு கோரி புலம்பெயர் இளைஞர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ICPPG யினால் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (6) வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் வழங்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த நாளில் நீதிமன்றின் முன் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இணையுமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன்னர் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அரசியல் தலையீடுகளால் அது மீளப்பெறப்பட்டது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ‘இறுதித்தீர்ப்பிலும் அரசியல் தலையீடுகள் வேண்டாம்’ ‘யுத்தக்குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை பிரித்தானியா கைது செய்ய வேண்டும்’ என கோரி புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றின் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவுள்ளனர்.

Print Friendly, PDF & Email