SHARE

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் சற்றுமுன் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சுவிஸ் தூதரக பெண் ஊழியரை கைது செய்யுமாறு உத்தரவு

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பொய்யான தகவல்களை வழங்கியதற்காக அவரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைககளுக்காக பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதற்காக அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email