SHARE

மன்னார்- நானாட்டான் நறு விலிக்குளம் பகுதியில் இளம் குடும்பம்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி முருகங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நானாட்டான் பிரதேசசபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் தனது கணவரான நிமால் (வயது-30) என்பவரே காணாமல் போயுள்ளார் என அவது மனைவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த இந்த குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கள் பொலிஸ் நிலையத்தில் மனைவி மேற்படி முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

எனினும் 2 நாள் கடந்தும் இதுவரை குறித்த நபர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இவ்விடயம் தொடர்பாக எவர் மீதும் சந்தேகம் கொள்ளும்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை. யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முருங்கன் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email