SHARE

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

”சிங்கள மக்கள் உங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள்..அதேபோல தமிழ் மக்கள் எங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். எனவே நாங்கள் இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

”இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்குப் பின்னர் உணவகத்தில் நடந்த தேநீர் விருந்துபசாரத்தின்போது நடந்த சம்பாஷணையில் ஜனாதிபதி கோட்டாபயவிடம் சம்பந்தன் மேற்படி தெரிவித்தாரென அறியமுடிந்தது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்.சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர்.அதேபோல பெரும்பாலான தமிழ் மக்கள் எமக்கு ஆதரவளித்துள்ளனர்.

எனவே நாங்கள் இருவரும் இரு தரப்பிலும் பிரதான சக்திகளாக இருக்கிறோம்.நாங்கள் இருதரப்பும் ஒன்றுபட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வை காண முன்வரவேண்டும்.அதற்கான பேச்சுக்களை நடத்த நாம் தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் எம் பியின் பேச்சை நிதானமாக செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தாம் சந்தித்து பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email