SHARE

யாகவி றொபின்சன் எழுதிய ‘Life in Word’ ஆங்கில கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 25-01-2020 அன்று மாலை நான்கு மணியளவில், ஈழத்து நவீன நாடக முன்னோடியும், ஊடகவியலாளருமான திரு ஏ சி தாசீசியஸ் அவர்களின் தலைமையில், பிரித்தானியாவில் இப்ஸுவிச் என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்து சிறுமி யாகவியை ஊக்குவிக்குமுகமாக 100 க்கும் அதிகமான மக்கள் இன மத பாகுபாடின்றி ஒன்றிணைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஆசிரியர் திரு கெவின் யங், திருமதி லிஸ் வூட் , பாடசாலை அதிபர் திரு பேக்கர், பாஸ்ரர் மோசேஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நூலின் முதலாவது பிரதியை ‘Suffolk BBC’ ஊடகவியலாளர் கற்ட் ரெய்லர் அவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் திரு கீதார்த்தனன் குலசேகரம் அவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.

சிறுமி சிதுஜா கிங்ஸ்லியின் நடனமும் இடம்பெற்று இறுதியில் விருந்துபசாரத்துடன் இனிதே நிறைவுற்றது.

Print Friendly, PDF & Email